×

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் யுகல் (22). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பி சென்றனர். இது தொடர்பாக யுகல் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Yukal ,Ponnaiyarajapuram ,Selvapuram, Coimbatore ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...